For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

47 வயது பெண்ணை கற்பழித்த மாணவன் கைது

By Staff
Google Oneindia Tamil News


நெய்வேலி: நெய்வேலி அருகே உடல் வளர்ச்சி குன்றிய 47 வயது பெண்ணை 13 வயதாகும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரங்கமங்கலத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராம்குமார் (13). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பகுதியைச் சேர்ந்தவர் பத்மா (47). இவர் உடல் வளர்ச்சி குன்றியவர். இரண்டரை அடி உயரமே இருப்பதால், இவருக்கு கல்யாணம் கை கூடவில்லை.

இந்த நிலையில், சம்பவத்தன்று ராம்குமார் பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது பத்மா வீட்டில் தனியாக இருப்பதை பார்த்தார். இதையடுத்து அவரை கட்டாயப்படுத்தி தூக்கிச் சென்று கற்பழித்துள்ளார்.

ராம்குமார் தன்னை பலாத்காரம் செய்த விவகாரத்தை தனது வீட்டாரிடம் தெரிவித்த பத்மா, போலீசிலும் புகார் செய்தார்.

அதிர்ச்சி அடைந்த போலீஸார், ராம்குமாரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து போலீசார் பத்மாவையும், ராம்குமாரையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

தாயின் வயதுடைய ஒரு பெண்ணை, அதிலும், உடல் ஊனமுற்ற பெண்ணை 13 வயது சிறுவன் கற்பழித்த கொடூரச் செயல், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X