விசாரணைக்காக போலீஸ் நிலையம் சென்ற 3 பேர் மாயம் - மக்கள் மறியல்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: விசாரணைக்காக போலீஸாரால் கடந்த வாரம் அழைத்துச் செல்லப்பட்ட 3 பேர் இன்னும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும், பொதுமக்களும் திண்டுக்கல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரும், அவரது குடும்பத்தினர் இருவரும் கொள்ளை வழக்கில் திண்டுக்கல் வடக்கு போலீஸாரால் கடந்த வாரம் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆனால் இதுவரை அவர்கள் 3 பேரும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவர்களது குடும்பத்தினரும், அப்பகுதி பொதுமக்களும் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையம் உள்ள திண்டுக்கல் - பழனி சாலையில் குழுமி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications