For Daily Alerts
Just In
பெனாசிர் தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம்
பெனாசிர் படுகொலையைத் தொடர்ந்து ஜனவரி 8ம் தேதி நடப்பதாக இருந்த பொதுத் தேர்தல் பிப்ரவரி 18ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெனாசிர் தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெனாசிர் பூட்டோவின் மரணத்தைத் தொடர்ந்து அவர் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த லர்கானா - ஷிகார்பூர் தொகுதியில், தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 18ம் தேதி நடைபெறும் தேர்தல் முடிந்த பின்னர் இந்தத் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள ஒரு சட்டசபைத் தொகுதியிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, January 5, 2008, 10:36 [IST]