டெல்லி: குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் பலி
டெல்லி: டெல்லியில் இன்று அதிகாலை நடந்த பயங்கர தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
மத்திய டெல்லியில் உள்ள சதார் பஜார் ரயில் நிலையம் அருகே உள்ள குடிசைப் பகுதியில் இந்த அதிகாலை 2.30 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டது.
ரயில் நிலையத்தின் லாஹரி கேட் பகுதியில் இத்தீவிபத்து ஏற்பட்டது.
இந்த குடிசைப் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் தங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான குடிசைகள் உள்ளன.
தீவிபத்தில் 3750 குடிசைகள் தீயில் கருகி விட்டன. 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்த 5 பேரின் உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிய நிலையில் இருந்தன.
தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் நிதியுதவி:
தீ விபத்தில் இறந்த பெரியவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சிறியவர்களுக்கு ரூ.50,000-ம், அதிக காயம் அடைந்தவர்களுக்கு 20,000 ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 10,000 ரூபாயும் டில்லி முதல்வர் ஷீலா தீக்சித் நிதியுதவி அறிவித்துள்ளார். இது தவிர தீவிபத்தால்
பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.2000 உதவித் தொகை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications