நெல்லை அருகே வயிற்றுப் போக்குக்கு 2 பெண்கள் பலி

Subscribe to Oneindia Tamil


நெல்லை: நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் மற்றும் பூங்குளம் ஆகிய கிராமங்களில் வயிற்றுப் போக்குக்கு 2 பெண்கள் பலியானார்கள். 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவூடையனூரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள வடக்கு பூலாங்குளத்தில் நேற்று முன்தினம் வாந்தி, பேதியால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் உடனடியாக பாவூர்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலயைத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ராணி என்பவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

மேலும் ஒரு பெண் பலி:

இதேபோல் பூலாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அழகாபுரியில் 200 பேர் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு பாவூர்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் ராமலட்சுமி என்ற பெண் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இருப்பினும் இதை அதிகாரிகள் வெளியில் சொல்லாமல் உள்ளனர்.

வயிற்றுப் போக்குக்கு காரணம், இந்த கிராமத்திற்கு வரும் குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்தது தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இதனால் அந்த கிராமத்தினர் அனைவரையும் நீரை காய்ச்சி குடிக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+