இலங்கையில் சிறைபட்டுள்ள 3 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை
சென்னை: இலங்கை கடற்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 நாகை மாவட்ட மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய வெளியுறவு அமைச்சகம், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மூலமாக மூன்று நாகை மீனவர்களையும், அவர்களது படகுகளயும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று இரவு நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 740 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அனைவரிடமும் முறையான உரிமங்கள் இருந்தன.
அவர்களில் 31 மீனவர்களையும், அவர்களது படகுகைளயும் இலங்கை கடற்படை பிடித்தது.
தகவல் கிடைத்தவுடன் அரசு இந்த விவகாரத்தை இலங்கை துணைத் தூதரகத்திற்கும், இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடமும் கொண்டு சென்றது. இதையடுத்து 28 மீனவர்களும், 3 படகுகளும் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களை இந்திய கடலோரக் காவல் படை பத்திரமாக தமிழகத்திற்கு அழைத்து வந்தது.
கடற்படையினரின் பிடியில் உள்ள மற்ற 3 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் மீட்க உரிய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications