தற்கொலை நகராகும் திருச்செந்தூர்
திருச்செந்தூர்: முருகனின் தலமான திருச்செந்தூரில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்கொலை நகரம் என்ற பெயரெடுக்க ஆரம்பித்துள்ளது திருச்செந்தூர்.
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு என்ற பெருமைக்குரிய தலம் திருச்செந்தூர். இந்த புண்ணிய தலத்தில் மன விரக்தியால் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
சமூக மாற்றங்கள், மற்றும் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியவற்றால் தனி மனிதன் கடும் பாதிப்புக்குள்ளாகிறான். பிரச்சனைகளை எதிர்த்து போராடும் ஆற்றல் இல்லாதவர்கள் இறுதியில் தங்கள் வாழ்க்கையை மாய்த்து கொள்ள துணிகின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தை சேர்ந்த பலரும் இதற்கு தேர்ந்தெடுக்கும் இடம் திருச்செந்தூர் என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.
கடந்த வருடத்தில் மட்டும் திருச்செந்தூர் சரகத்தில் 94 பேர் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள்.
பிரச்சனைகளில் சிக்கி மீள முடியாமல் தற்கொலை செய்ய முடிவெடுப்பவர்களில் சிலர் திருச்செந்தூர் வருகின்றனர். தனியார் லாட்ஜ் மற்றும் கடற்கரைக்கு பகுதிக்கு சென்று விஷம் குடித்தோ அல்லது தூக்கில் தொங்கியோ தங்கள் உயிரை மாய்க்கின்றனர்.
இதுபோன்ற தற்கொலைகளை தடுக்க காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். விடுதிகளில் தங்கியிருப்போர் மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். விடுதிகளில் கவுன்சிலிங் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications