சவுதி மன்னருக்கு பைசல் விருது
ரியாத்: சவூதி அரேபிய மன்னரும், புனிதப் பள்ளிகளின் பொறுப்பாளருமான மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அப்துல்லா இஸ்லாமிய சேவைக்காக மன்னர் பைசல் சர்வதேச விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அரபு நாட்டின் மன்னர் பைசல் சர்வதேச விருது நோபல் பரிசுக்கு இணையானதாகும். ஒவ்வொரு வருடமும் அறிவியல், மருத்துவம், அரேபிய சொற்பொழிவு, இஸ்லாமிய கல்வி உட்பட சேவைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்.
இதுவரை இந்த விருதை 35 பேர் பெற்றுள்ளனர். சவுதி அரேபியாவைச் சேர்ந்த 10 பேரும், எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள் 4 முறையும், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், மலேசியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் தலா 2 முறையும் இந்த விருதை வென்றுள்ளனர்.
இது தவிர இந்தியா, சூடான், லெபனான், நைஜீரியா, நைஜர், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, போஸ்னியா, பிரான்ஸ், தஜாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications