Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடுதலைப் புலிகள் தொய்வடையவில்லை - இலங்கை அமைச்சர் சந்திரசேகரன்

Subscribe to Oneindia Tamil

Chandrasekaran
டெல்லி: விடுதலைப் புலிகளின் பலத்தில் எந்தவிதத் தொய்வும் இல்லை. அவர்கள் உறுதியாகவே உள்ளனர். தளர்ச்சி அடையவில்லை. பிரபாகரன் நலமுடனேயே உள்ளார் என்று இலங்கை அமைச்சர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த வெளிநாடு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சந்திரசேகரன் வந்திருந்தார். அப்போது அவர் அளித்த ஒரு பேட்டியில், போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசு வெளியேறியுள்ளதைத் தொடர்ந்து இலங்கையில் எந்த நேரமும் போர் வெடிக்கக் கூடிய அபாயம் எழுந்துள்ளது.

தமிழர் வீடுகளில் ராணுவம் அதிரடி சோதனைகளை நடத்தி வருவது. முன்பை விட இது அதிகரித்துள்ளது.

ராணுவத்தின் தொடர் நடவடிக்கையாலும், சில தலைவர்களின் இழப்பாலும் புலிகள் இயக்கம் தொய்வடைந்திருப்பதாக எங்களால் உறுதியாக கூற முடியவில்லை. புலிகளின் உறுதியில் தளர்ச்சி இல்லை.

அரசுக்கு அடிபணியவோ, போராட்டத்தைக் கைவிடவோ அவர்கள் தயாராக இல்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் நல்ல நலத்துடனேயே உள்ளார்.

இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வே சரியானதாகும் என்பதை இலங்கை அரசிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும், பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்திக்க வேண்டும்.

இதை அண்டை நாட்டுப் பிரச்சினை என்று பார்க்காமல், தமிழர் பிரச்சினை என்று அணுக வேண்டும். அப்போதுதான் இதற்குத் தீர்வு ஏற்படும் என்றார் சந்திரசேகரன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+