மதுரை ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது
மதுரை: மதுரையை கலக்கி வந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை போலீசார் இன்று கைது செய்தனர்.
கடந்த வாரம் சென்னையில் மதுரையை சேர்ந்த அழகர் உட்பட 5 ரவுடிகளை சென்னையில் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மதுரையை சேர்ந்த டாக் ரவி என்ற ரவுடியைக் கொலை செய்வதற்காக
வந்தது விசாரணையில் தெரியவந்தது.
டாக் ரவியைக் கொல்ல பெரும் ரவுடிக் கும்பலே சென்னைக்குள் ஊடுறுவியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
டாக் ரவி தவிர இன்னொரு பிரபல ரவுடியான திண்டுக்கல் பாண்டியன் ஆகிய இருவரையும், அவரது கூட்டாளிகளையும் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரையில் கொலை, கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வத்தை போலீசார் திடீரென்று கைது செய்தனர்.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வரிச்சியூர் செல்வம், போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து கடந்த வருடம் மதுரை காவல்துறை ஆணையரிடம் தான் திருந்தி வாழ்வதாக கூறினார்.
ஆனால் அதற்கு பின்னர் வரிச்சியூர் செல்வத்தின் மனைவியை, கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக திடீரென்று வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications