ஆசியர்களுக்கு கத்தாரில் வேலைவாய்ப்பு
கத்தார்: வளைகுடா நாடான கத்தாரில் ஆசிரியர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
துபாயைத் தொடர்ந்து வளைகுடாவில் கத்தார் நாடு பெரும் வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறது. தற்போது அங்கு ஏராளமான வேலைவாய்ப்பை அந்நாட்டு அரசு உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து டாக்கா வந்த கத்தார் தொழிலாளர் நல அமைச்சர் சுல்தான் அல் தோஸரி கூறியதாவது,
கத்தார் நாடு தற்போது அபார வளர்ச்சி பெற்றுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான ஆசிய நாட்டவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வங்காளதேசத்தில் தொழிலாளர்களை தேர்வு செய்வது தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும்.
மேலும் இலங்கையில் இருந்து அடுத்த 10 மாதத்தில் 55,000 பேர் தேர்வு செய்வது சம்பந்தமான ஒப்பந்தத்தில் ஜனவரி 9ம் தேதி கையெழுத்திட உள்ளோம்.
கத்தாரில் ஏராளமான ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கும் ஆசிய நாட்டவர்களை தேர்வு செய்யவுள்ளோம் என்றார்.