அலட்சிய பதில்-சுகாதார துணை இயக்குனரை சிறைபிடித்த மக்கள்
மார்த்தாண்டம்: குழித்துறை அருகே வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலட்சியமாக பேசியதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அவரை சிறை பிடித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகேயுள்ள கன்னக்கோடை சேர்ந்த விஜயன்-செல்வி தம்பதியின் குழந்தைகள் ஜெயகர், வினிதா.
சில நாட்களுக்கு முன் வினிதாவுக்கு கடுமையான காய்ச்சலுடன், வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து வினிதா மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டது.
வினிதாவை தொடர்ந்து அவரது தாயார் செல்வி, சகோதரன் ஜெயகர் ஆகியோரும், வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் வேறொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மார்த்தாண்டத்தை சேர்ந்த ராஜாமணி என்வரின் மனைவி விஜயா மற்றும் நேசமணி, ராஜூ ஆகியோரும் வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரான டாக்டர் ரால்ப் செல்வின் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நோய் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்தனர்.
அப்போது கன்னக்கோடு கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாந்தி-பேதியை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் கூறினர்.
அத்துடன் கன்னகோடு கவுன்சிலர் ராஜசேகர், டாக்டர் ரால்ப் செல்வினிடம் எங்களுடைய பகுதிகள் அனைத்தும் சுகாதார கேடாக இருக்கிறது. நோய் வந்தால் அவசர சிகிச்சை பெற முடியவில்லை என்றார்.
அதற்கு டாக்டர் ரால்ப் செல்வின் இதுகுறித்து நீங்கள் நகராட்சியிடம்தான் தெரிவிக்க வேண்டும் என்று அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்படியானால் நீங்கள் எதற்காக வேலை செய்கிறீர்கள், அரசாங்கத்தில் வாங்குகிற சம்பளத்திற்கு நீங்கள் வேலை செய்ய மாட்டீர்களா, மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார துறையே கெட்டு குட்டி சுவராகி விட்டது என்று அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.
அவர்களிடம் செல்வின் கோபமாக பேசவே அவரை சிறை பிடித்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மற்ற அதிகாரிகள் விரைந்து வந்து ஊர் பெரியவர்களுடன் பேசி அவரை விடுவித்தனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications