For Daily Alerts
Just In
மோடி வருகையை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத் ஆர்ப்பாட்டம்
திருச்சி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னைக்கு வருவதைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக அமைப்பின் மாநில செயலாளர் முகம்மது முனீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஜனவரி 14ம் தேதி சென்னைக்கு வருகிறார்.
அவருக்கு விருந்து தர முடிவு செய்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை கடுமையாக கண்டிக்கிறோம்.
மோடியின் வருகையை எதிர்த்து திருச்சியில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கைதாகினர்.
இதேபோல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜமாத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர் என்று கூறியுள்ளார்.
Comments
Story first published: Saturday, January 12, 2008, 11:22 [IST]