For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அலங்காநல்லூர், பாலமேடு கிராமங்களில் உண்ணாவிரதம்

By Staff
Google Oneindia Tamil News

Jallikattu

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து அலங்காநல்லூர், பாலலமேடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அலங்காநல்லூரில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

அலங்காநல்லூர் பழைய காவல் நிலையம் அருகே இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. அலங்காநல்லூர், பாலமேட்டைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

100 பெண்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். பெரும் திரளானோர் குடும்பம் குடும்பமாக உண்ணாவிரதம் இருந்தனர்.

அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய கிராமங்களில் 2வது நாளாக இன்றும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

பாலமேட்டிலும் பெரும் திராளனோர் உண்ணாவிரதம் இருந்தனர்.

இது தொடர் உண்ணாவிரதம் என இரு கிராமத்தினரும் தெரிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தையொட்டி இரு கிராமங்களிலும் போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X