விபத்தில் சப்-கலெக்டர் படுகாயம் - மகன் பலி

Subscribe to Oneindia Tamil


தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வேன் மீது லாரி மோதியதில் நெல்லை சப்-கலெக்டர் மகன் பலியானார். மேலும் சப்-கலெக்டரும், அவரது மனைவியும் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி மட்டக்கடை ராமநாடார்விளையை சேர்ந்தவர் சேது ராஜன். நெல்லை மாவட்டத்தில் இலவச கலர் டிவி திட்ட துணை ஆட்சியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயராணி. இவர்களது மகன் பென்னட் நெப்போலியன்.

நெப்போலியனின் ஒன்றரை வயது மகன் பிரைசன். குழந்தையை மதுரையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனைக்காக காட்டி விட்டு வேன் மூலம் தூத்துக்குடி திரும்பிக் கொண்டிருந்தனர்.

வேனை நெப்போலியன் ஓட்டி வந்தார். தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குசாலை சுப்பிரமணியபுரம் விலக்கு அருகில் வந்து கொண்டிருந்தபோது தூத்துக்குடியில் இருந்து எட்டயாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி வேன் மீது மோதியது.

இதில் பென்னட் நெப்போலியன் சம்பவ இடத்திலேயே பலியானார். சப் கலெக்டர், அவரது மனைவி, பேரன் பிரைசன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை அப்பகுதி மக்கள் காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+