ஓடும் ரயிலில் என்ஜீனியர் குத்திக் கொலை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: ஓடும் ரயிலில் என்ஜீனியர் ஒருவர் பிணமாக கிடந்தது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை - நாகர்கோவில் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை வந்து கொண்டிருந்தது. அப்போது மதுரை ரயில் நிலையத்தில் ராஜேஷ் பாபு (24) என்ற என்ஜீனியர் அந்த ரயிலில் ஏறினார்.
இன்று காலை நெல்லை ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் வந்தபோது ராஜேஷ் பாபு பிணமாக கிடந்தது தெரிய வந்தது. ரயிலின் கழிப்பறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார் ராஜேஷ் பாபு.
அவரது உடலில் பல இடங்களில் கத்திக் குத்துக் காயங்கள் உள்ளன. ராஜேஷ் பாபுவைக் கொன்றது யார் என்று தெரியவில்லை.
அவரது உடலை நெல்லை அரசு மருத்துவமனைக்கு போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications