For Daily Alerts
Just In
கண்களை கட்டிக் கொண்டு கீபோர்ட் வாசித்து சாதனை
திருச்சி: திருச்சியைச்சேர்ந்த 19 வயது இளைஞர் கண்களை மூடிக் கொண்டு கீபோர்ட் வாசித்து சாதனை படைத்துள்ளார். கின்னஸ் சாதனைக்காக இந்த முயற்சி நடத்தப்பட்டது.
திருச்சியைச் சேர்ந்தவர் ராபின்சன் பாட்ரிக். இவர் இசையமைப்பதில் பல சாதனைகளைப் படைத்தவர். தமிழ் திரைப்படப் பாடல்கள், கிறிஸ்தவ பக்திப் பாடல்கள் சுமார் 450க்கு கீபோர்ட் மூலம் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு இடைவிடாமல் 72 மணி நேரம் கீ போர்ட் வாசித்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார் பாட்ரிக்.
இந்த நிலையில், நேற்று தொடர்ந்து 12 மணி நேரம் கண்களை மூடிக் கொண்டு கீபோர்ட் வாசித்து சாதனை படைத்தார்.
எதிர்காலத்தில் 100 மணி நேரம் கீபோர்ட் வாசித்து சாதனை படைக்கவும், இந்தியா 2020 என்ற இசை ஆல்பத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார் பாட்ரிக்.
Comments
Story first published: Monday, January 14, 2008, 12:27 [IST]