இந்தியர்களைத் திட்டிய சவூதி விமான பயணியால் பரபரப்பு
சென்னை: மும்பை - சென்னை இடையிலான ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த சவூதியைச் சேர்ந்த பயணி குடிபோதையில் சக பயணிகளுடன் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று இரவு மும்பையிலிருந்து பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்னைக்கு வந்தது. அதில் அல்டோசாரி முகம்மது (49) என்கிற சவூதி அரேபிய பயணி பயணித்தார்.
குடிபோதையில் இருந்த அவர் சவூதியில் பணியாற்றும் இந்தியர்கள் குறித்து அவதூறாகப் பேசினார். மேலும், இந்தியர்களால் சவூதி அரேபியர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சத்தம் போட்டு திட்டினார்.
இந்த நிலையில் விமானம் இரவு 11 மணிக்கு சென்னையை வந்தடைந்தது. விமானம் தரையிறங்கியதும், விமானத்தில் பயணித்த கேரளாவைச் சேர்நத் அபூபக்கர் பாரி என்பவர் போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் அல்டோசாரி முகம்மதுவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதனை நடத்தினர்.
இந்த நிலையில் காலையில் போதை முற்றிலும் தெளிந்த முகம்மது, தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார். அபூபரக்கர் பாரியிடமும் மன்னிப்பு கேட்டார்.
இதையடுத்து அபூபக்கர் பாரி தனது புகாரைத் திரும்பப் பெற்றார். இதையடுத்து முகம்மதுவை கடுமையாக எச்சரித்து போலீஸார் அவரை அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications