வெற்றி பெற வைத்தவர்கள் பெண்கள்: மோடி
சென்னை: குஜராத் சட்டசபைத் தேர்தலில் நான் வெற்றி பெற பெண்களே காரணம். பெண்கள் அதிக அளவில் வாக்களித்ததால்தான் பாஜகவால் வெற்றி பெற முடிந்தது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்த மோடி அங்கு திரண்டிருந்த பெரும் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பாகவே நான் பெண்களுக்காக சிறப்பு மாநாடுகளை நடத்தினேன்.
ஒன்றல்ல, இரண்டல்ல, 27 மாநாடுகளை நடத்தினேன். இது முற்றிலும் பெண்களின் குறைகளை கேட்டறிவற்காக நடத்தப்பட்ட மாநாடு. அந்த மாநாடுகளின்போது பெண்கள் பலர் பெருமளவில் திரண்டு வந்தனர். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தேன்.
அதை நிவர்த்தி செய்யவும் துரித நடவடிக்ைக எடுத்தேன். இதனால் பெண்களுக்கு என் மீதும், பாஜக மீதும் நம்பிக்ைக பிறந்தது. இது தேர்தலிலும் எதிரொலித்தது. வாக்குப் பதிவில் கடந்த முறையை விட இந்த முறை 3 சதவீத பெண்கள் கூடுதலாக வாக்களித்திருந்தனர்.
பெண்கள்தான் பாஜகவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்த முக்கியக் காரணம். அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுத்தான் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளோம். அந்த நம்பிக்கை கெடாத வகையில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.
பாஜக ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய மூன்று பேருக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இவர்கள் மூன்று பேரும் திருப்திகரமாக இருந்தாலே ஒரு மாநிலம் தானாக முன்னேறி விடும். அதைத்தான் நான் செய்தேன், செய்து வருகிறேன் என்றார் மோடி.












Click it and Unblock the Notifications