கோவில்கள் தாக்குதல்: போராட்டம் நடத்துவோம் - இந்து முன்னணி எச்சரிக்கை
சென்னை:கோவை மற்றும் நீலகிரி மாவட்ட கோவில்கள் மீதும், சாமி சிலைகள் மீதும் தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் ஈடுபடும் விஷமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், ஈரோடு மாவட்டம் தாராபுரம் ஆகிய ஊர்களில் கலவரங்களை தூண்டுவதற்காக தொடர்ந்து கோயில்களையும், சாமி சிலைகளையும் உடைக்கிற, தீவைக்கிற செயல்கள் நடந்து வருகின்றன. இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
மாறாக இந்த செயல்களை கண்டிப்பவர்களை தடுப்புக் காவலில் வைப்பதாக பயமுறுத்துவதும், தாராபுரத்தில் ஒருவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்திருப்பதும் இந்துக்களை மிரட்டுகிற செயலாகும்.
இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு முழுவதும் இந்து விரோத நடவடிக்கைகளை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்த வேண்டி இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications