மின் கம்பம் விழுந்து பெண் பலி
Subscribe to Oneindia Tamil
திசையன்விளை: துருப்பிடித்த நிலையில் பழுதுபட்டிருந்த மின்சார கம்பம் சரிந்து விழுந்ததில் பெண் இறந்தார்.
திசையன்விளை அருகே மலையன்குடியிருப்பை சேர்ந்தவர் விவசாயி தங்கசாமி. இவரது மனைவி அன்னபுஷ்பம். இருவரும் சங்கரன்குடியிருப்பு சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது துருபிடித்து பழுதான நிலையில் உள்ள மின்கம்பம் திடீரென சரிந்து விழுந்தது. அப்போது தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த அன்னபுஷ்பம் மீது மின்சார ஓயர்கள் விழுந்தன. இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.












Click it and Unblock the Notifications