சிறுவர் பூங்காவில் படகு விபத்து-சிறுமி பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: பூந்தமல்லி அருகே உள்ள குயீன்ஸ்லேண்ட் சிறுவர் பூங்காவில் உள்ள செயற்கைக் குளத்தில் விழுந்து மூழ்கி 11 வயது சிறுமி பலியானாள்.
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே உள்ளது இந்த குயீன்ஸ்லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க்.
இங்குள்ள செயற்கை குளத்தில் படகுகளில் மக்கள் சவாரி செய்து கொண்டிருந்தனர். 15 பேர் சென்ற ஒரு படகின் பின் புறமாக இன்னொரு படகு இடித்தது.
இதில் முதல் படகு கவிழ்ந்தது. அதிலிருந்தவர்கள் நீருக்குள் விழுந்தனர். அவர்களில் சில நீந்தி கரையேறினர். மற்றவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டனர்.
ஆனால், மேடவாக்கத்தைச் சேர்ந்த அனுஷா (11) என்ற சிறுமி நீருக்குள் மூழ்கி மூச்சுத்திணறி இறந்தாள்.
அந்தக் குளம் 8 அடி ஆழம் கொண்டதாகும்.












Click it and Unblock the Notifications