சேது சமுத்திர திட்டம்-மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு!
டெல்லி: சேது சமுத்திரத் திட்டத்தின் நிலை குறித்த மத்திய அரசின் நிலையை 2 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ராமர் பாலம் இடிக்க இடைக்கால தடை விதித்ததுடன் மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை அமைத்து பதில் மனு தாக்கல் செய்ய 3 மாத கால அவகாசம் அளித்தது.
இதுதொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ராமர் இருந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அந்த பதில் மனுவை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
இந்த நிலையில் நேற்று சேது சமுத்திர திட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. நேற்று மத்திய அரசு தனது புதிய பதில் மனுவைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் உச்சநீதி மன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதை தொடர்ந்து உச்சநீதிமன்றம் புதிய மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அரசுக்கு 15 நாள் அவகாசம் அளித்துள்ளது. அதற்குள் சேது சமுத்திரத் திட்டம் குறித்து மத்திய அரசின் நிலை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications