போலி பாஸ்போர்ட்-விமான நிலையத்தில் இலங்கை தமிழர் கைது
சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையிலிருந்து கனடா செல்ல முயன்ற இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார்.
இலங்கை நுவரேலியா பகுதியைச் சேர்ந்தவர் துளசிதரன் (வயது 27). இவர் நேற்று முன்தினம் இரவு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் கனடா செல்ல வந்தார்.
அவரது பாஸ்போர்ட்டை சோதனை செய்த குடியுரிமைத்துறை அதிகாரிகள் அது போலியானது என கண்டு பிடித்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விமான நிலைய உதவி கமிஷனர் குப்புசாமியிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மத்திய குற்றப்பிரிவு போலீசிடம் ஒப்படைத்தார். விசாரணையில், துளசிதரன் இலங்கையிலிருந்து கள்ளத்தோணி மூலம் ராமேஸ்வரம் வந்தது தெரிய வந்தது.
மேலும் சென்னைக்கு வந்து போலி பாஸ்போர்ட்டை துளசிதரன் தயாரித் துள்ளார். அந்த போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி சென்னையிலிருந்து சிங்கப்பூர் வழியாக கனடா செல்ல துளசிதரன் முயற்சித்துள்ளார் என்றும் தெரிய வந்தது.
இதைதொடர்ந்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு துளசிதரன் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications