சிறுமி பலி-7 குயீன்ஸ்லேண்ட் சிறுவர் பூங்கா ஊழியர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூந்தமல்லி அருகே உள்ள குயீன்ஸ்லேண்ட் சிறுவர் பூங்காவில் உள்ள செயற்கைக் குளத்தில் விழுந்து மூழ்கி 11 வயது சிறுமி பலியான விவகாரத்தில் பூங்கா ஊழியர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே உள்ளது இந்த குயீன்ஸ்லேண்ட் அம்யூஸ்மெண்ட் பார்க்.

இங்குள்ள செயற்கை குளத்தில் படகுகளில் மக்கள் சவாரி செய்து கொண்டிருந்தனர். 15 பேர் சென்ற ஒரு படகின் பின் புறமாக இன்னொரு படகு இடித்தது.

இதில் முதல் படகு கவிழ்ந்ததில் அதிலிருந்தவர்கள் நீருக்குள் விழுந்தனர். அவர்களில் சில நீந்தி கரையேறினர். மற்றவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டனர்.

ஆனால், மேடவாக்கத்தைச் சேர்ந்த ராஜ் என்பவரின் மகள் அனுசுயா (11) நீருக்குள் மூழ்கி மூச்சுத்திணறி இறந்துவிட்டார்.

8 அடி ஆழம் கொண்ட அந்தக் குளத்தில் ேபாதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை.

விபத்து குறித்து அறிந்தவுடன் நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ரியாசுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

படகு டிரைவர்கள் ஜெகநாதன், முனுசாமி, படகு உதவியாளர்கள் ஆனந்த், செல்வம், மேலாளர்கள் மணிகண்டன், சோமசுந்தரம், துணைப் பொது மேலாளர் ஷிபான் பான் (50) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+