'கருணாநிதி கைது புகழ்' முத்துக்கருப்பனுக்கு மீண்டும் பதவி

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில், கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவரும், கடந்த 4 ஆண்டுகளாகவே காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தவருமான ஐஜி முத்துக்கருப்பன் கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி அதிமுக ஆட்சியில் திமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்போது சென்னை மாநக காவல்துறை ஆணையராக இருந்தவர் முத்துக்கருப்பன்.
(இவரை இந்தப் பதவிக்குக் கொண்டு வந்ததே முதல்வராக இருந்த கருணாநிதி தான் என்பது குறிப்பிடத்தக்கது)
அதன் பின்னர் ஜெயலலிதாவுடன் இவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. 2003ம் ஆண்டு இவரை சஸ்பெண்ட் செய்தார் ஜெயலலிதா.
பின்னர் வந்த திமுக ஆட்சியில் முத்துக்கருப்பன் அவர் பதவி எதுவும் வழங்கப்படாமல் தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார்.
ஒரு முறை முதல்வர் கருணாநிதியை நேரிலும் போய் பார்த்து கண்கலங்கிவிட்டு வந்தார். ஆனாலும் பதவி தரப்படவில்லை.
இந் நிைலயில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பின் அவருக்கு இப்போது கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக தலைமைக் கண்காணிப்பு அதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர மேலும் சில அதிகாரிகளும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
ஏடிஜிபி ராமானுஜம் சென்னை போலீஸ் பயிற்சிக் கல்லூரி ஏடிஜிபியாக நியிமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சென்னை நகர ஆணையர் நடராஜன், போலீஸ் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்வாரிய தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநருக்கான முன்னாள் பாதுகாப்பு அதிகாரி (எஸ்.பி.) அஷ்வின் கோத்னிஸ், நாகை மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறையின் 9வது பட்டாலியன் (மணிமுத்தாறு) கமாண்டன்ட் ஆக தமிழ்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாகை எஸ்.பியாக இருந்த கல்பனா நாயக் காலியிடப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications