மது: பொங்கல் விற்பனை ரூ. 50 கோடி!
Subscribe to Oneindia Tamil

தமிழத்தில் விழாக் காலங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் மது விற்பனையாகும். ஆங்கிலப் புத்தாண்டின்போதும் வழக்கத்தை விட கூடுதல் மது விற்பனையானது.
அதேபோல பொங்கல் பண்டிகையின்போதும் மது விற்பனை பல மடங்கு அளவுக்கு இருந்தது.
பொங்கல் தினமான ஜனவரி 15ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளில் ரூ. 50 கோடி அளவுக்கு விற்பனையாகியுள்ளதாம்.
வழக்கமாக தினசரி 25 ஆயிரம் மதுப் பெட்டிகள் விற்பனையாகும். பொங்கல் தினத்தின்போது இது 1.50 லட்சம் பெட்டிகளாக இருந்ததாம். கடந்த ஆண்டை விட இது அதிகம் என்று டாஸ்மாக் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திருவள்ளுவர் தினமான நேற்று மதுக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் கள்ளச் சந்தையில் பெருமளவிலான மது விற்பனையானதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications