'ஏவுகணை'-யுஎஸ் உதவியை நாடியதா இந்தியா?
Subscribe to Oneindia Tamil

எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானிலேயே தடுத்து-அழிக்கும் சக்தி கொண்ட ஏவுகணை எதிர்ப்பு எவுகணைகளை தயாரிக்கும் பணியில் (missile defence project) இந்தியா ஈடுபட்டுள்ளது.
இதற்கான ஆராய்ச்சிகள் டிஆர்டிஓவில் நடந்து வருகின்றன.
இந் நிலையில் இந்த ரக ஏவுகணைகளைத் தயாரிக்க அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் விண்துறை ஆராய்ச்சி மையத்தின் உதவியை டிஆர்டிஓ கோரியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஆனால், இதை டிஆர்டிஓவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பிரிவின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் பிரகலாத் மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், நமக்கு இந்த ஆராய்ச்சியில் யாருடைய உதவியும் தேவையில்லை. உள்நாட்டிலேயே அதை தயாரிக்கும் பணிகள் மிக வெற்றிகரமாக நடந்து வருகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications