தலித் என்ற வார்த்தையைப் பயன்படுத்த தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தடை
ரெய்ப்பூர்: அரசு அலுவலக ஆவணங்கள், பதிவேடுகள் உள்ளிட்டவற்றில், தலித் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது, அது சட்டவிரோதமானது என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது
அரசு அலுவலகங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பதைக் குறிக்கும் வகையில் தலித் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறு. ஆனால் தலித் என்ற வார்த்தை அரசியல் சட்டத்திலோ அல்லது தற்போது உள்ள எந்த சட்டத்திலுமோ இடம் பெறவில்லை.
அரசியல் சட்டத்தின் 341வது பிரிவின் கீழ், அட்டவணை வகுப்பு (தாழ்த்தப்பட்ட வகுப்பு) என்பதே சரியான பதமாகும். எனவே தலித் என்ற வார்த்தையை மாநில அரசுகள் பயன்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக அரசு தலித் மற்றும் தாழ்த்தப்பட்டோர் என்ற பதங்களுக்குப் பதில், ஆதி திராவிடர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகிறது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications