தாம்பரம், அம்பத்தூர் புதிய மாநகராட்சிகளாகின்றன
சென்னை: சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், அம்பத்தூர் ஆகியவை தனி மாநகராட்சிகளாகவுள்ளன. இப்போது இவை நகராட்சிகளாக உள்ளன.
தமிழக அரசு சமீபத்தில் ஈரோடு, திருப்பூர் நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றியது. அதைத் தொடர்ந்து தாம்பரமும் அம்பத்தூரும் மாநகராட்சிகளாக உருவெடுக்கவுள்ளன.
காஞ்சீபுரம் மாவட்டத்தின் கீழ் வரும் தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், பம்மல் ஆகிய நகராட்சிகளையும், சோழிங்கநல்லூர், பீர்க்கன்கரணை, பெருங்குடி, பெருங்களத்தூர் ஆகிய பேரூராட்சிகளையும், கொளத்தூர் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகள், திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள 11 ஊராட்சிகள் ஆகியவற்றை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படவுள்ளது.
புதிதாக அமைய உள்ள தாம்பரம் மாநகராட்சியின் கீன் ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், நங்கநல்லூர், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், மேடவாக்கம், செம்பரம்பாக்கம், திரிசூலம், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளும் இடம்பெறும் எனத் தெரிகிறது.
அம்பத்தூர் மாநகராட்சி:
மாதவரம், ஆவடி, அம்பத்தூர் ஆகிய 3 நகராட்சிகளையும் இணைத்து அம்பத்தூர் மாநகராட்சி உருவாக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications