கைதான 5 மலேசிய தமிழர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு
கோலாலம்பூர்: உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து மலேசியத் தமிழர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.
இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) நிர்வாகிகளான உதயக்குமார் உள்ளிட்ட 5 பேர், பிரிவினைவாதத்தைத் தூண்டியதாக கூறி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எந்தவித விசாரணையும் இன்றி, கால வரையின்றி சிறையில் வைக்க இந்த சட்டம் வகை செய்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், மனித உரிமை அமைப்புகள் இந்த சட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளன.
இந்த நிலையில் தங்களை காலவரையின்றி, விசாரணையின்றி சிறையில் அடைத்திருப்பதை கண்டித்து, ஐந்து தமிழர்களும், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை முதல் இவர்கள் தங்களது போராட்டத்தைத் தொடங்குகின்றனர். ஆரம்பத்தில் ஐந்து நாட்களுக்கு தண்ணீர் மட்டும் அருந்த முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு தண்ணீர் குடிப்பதையும் நிறுத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஹிண்ட்ராப் கணக்கு-வழக்கு குறித்து விசாரணை:
இதற்கிடையே, ஹிண்ட்ராப் அமைப்பின் கணக்கு வழக்குகள் குறித்து மலேசிய அரசு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
மலேசிய அரசின் உத்தரவின் பேரில் இந்த விசாரணையை காவல்துறை மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் உதயக்குமார் உள்ளிட்ட 5 நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட பின்னர் இந்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
பல கோடி பணத்தை ஹிண்ட்ராப் நிர்வாகிகள் முறைகேடு செய்துள்ளதாக மலேசிய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
சிறப்பு வழிபாட்டுக் கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் நன்கொடைகள் மூலம் ஹிண்ட்ராப் அமைப்பு 7 லட்சம் ரிங்கிட்டுக்களை (2.15 லட்சம் அமெரிக்க டாலர்கள்) ஹிண்ட்ராப் வசூலித்ததாகவும், அந்தப் பணத்தை தவறான முறையில் அது பயன்படுத்தியுள்ளதாகவும் மலேசிய அரசு கூறுகிறது.
இந்த விசாரணை குறித்து டிஐஜி இஸ்மாயில் உமர் கூறுகையில், ஹிண்ட்ராப் அமைப்பு வசூலித்த பணத்தை தவறான முறையில் பயன்படுத்தியுள்ளதாக எங்களுக்குப் புகார் வந்துள்ளது. எனவே அதுகுறித்து விசாரித்து வருகிறோம்.
இந்தப் பணத்தை ஹிண்ட்ராப் நிர்வாகிகள் சுய லாபத்திற்காக பயன்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு வந்துள்ளது. எனவே இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications