Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைதான 5 மலேசிய தமிழர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு

Subscribe to Oneindia Tamil


கோலாலம்பூர்: உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து மலேசியத் தமிழர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.

இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) நிர்வாகிகளான உதயக்குமார் உள்ளிட்ட 5 பேர், பிரிவினைவாதத்தைத் தூண்டியதாக கூறி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எந்தவித விசாரணையும் இன்றி, கால வரையின்றி சிறையில் வைக்க இந்த சட்டம் வகை செய்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், மனித உரிமை அமைப்புகள் இந்த சட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்த நிலையில் தங்களை காலவரையின்றி, விசாரணையின்றி சிறையில் அடைத்திருப்பதை கண்டித்து, ஐந்து தமிழர்களும், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை முதல் இவர்கள் தங்களது போராட்டத்தைத் தொடங்குகின்றனர். ஆரம்பத்தில் ஐந்து நாட்களுக்கு தண்ணீர் மட்டும் அருந்த முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு தண்ணீர் குடிப்பதையும் நிறுத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஹிண்ட்ராப் கணக்கு-வழக்கு குறித்து விசாரணை:

இதற்கிடையே, ஹிண்ட்ராப் அமைப்பின் கணக்கு வழக்குகள் குறித்து மலேசிய அரசு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

மலேசிய அரசின் உத்தரவின் பேரில் இந்த விசாரணையை காவல்துறை மேற்கொண்டுள்ளது. கடந்த மாதம் உதயக்குமார் உள்ளிட்ட 5 நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட பின்னர் இந்த விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

பல கோடி பணத்தை ஹிண்ட்ராப் நிர்வாகிகள் முறைகேடு செய்துள்ளதாக மலேசிய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

சிறப்பு வழிபாட்டுக் கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் நன்கொடைகள் மூலம் ஹிண்ட்ராப் அமைப்பு 7 லட்சம் ரிங்கிட்டுக்களை (2.15 லட்சம் அமெரிக்க டாலர்கள்) ஹிண்ட்ராப் வசூலித்ததாகவும், அந்தப் பணத்தை தவறான முறையில் அது பயன்படுத்தியுள்ளதாகவும் மலேசிய அரசு கூறுகிறது.

இந்த விசாரணை குறித்து டிஐஜி இஸ்மாயில் உமர் கூறுகையில், ஹிண்ட்ராப் அமைப்பு வசூலித்த பணத்தை தவறான முறையில் பயன்படுத்தியுள்ளதாக எங்களுக்குப் புகார் வந்துள்ளது. எனவே அதுகுறித்து விசாரித்து வருகிறோம்.

இந்தப் பணத்தை ஹிண்ட்ராப் நிர்வாகிகள் சுய லாபத்திற்காக பயன்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு வந்துள்ளது. எனவே இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+