மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சல் தீவிரமாக பரவுகிறது
Subscribe to Oneindia Tamil
பிர்பம் (மேற்கு வங்கம்): மேற்கு வங்க மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பிர்பம் மாவட்டத்தில் மேலும் ஒரு தாலுகாவில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. இதுவரை 80 ஆயிரம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தை ஆட்டிப்படைத்து வரும் பறவைக் காய்ச்சல், பிர்பம் மாவட்டத்தில் இதுவரை முகம்மது, பஜார் உள்ளிட்ட தாலுகாக்களில் படு வேகமாக பரவி வருகிறது.
ஷியூரி மாவட்டத்தில் இதுவரை 80 ஆயிரம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன. மொத்தம் 4 லட்சம் கோழிகளைக் கொல்ல அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மருத்துவர்கள், கால் நடை மருத்துவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 60 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோழிகளைக் கொல்லும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த தனிப்படைகளின் எண்ணிக்கையை 300 ஆக அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications