முஹர்ரம்: சென்னையில் ஷியா முஸ்லீம்கள் ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: முஹர்ரத்தையொட்டி சென்னையில் முஸ்லீம்களில் ஒரு பிரிவினர் நடத்திய அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
முகம்மது நபிகளின் பேரனான ஹஸ்ரத் இமாம் உசேனும் அவரது குடும்பத்தினரும் கர்பலா என்ற இடத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டனர். இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள ஷியா பிரிவு முஸ்லீம்கள் துக்க தினமாக அனுசரித்து வருகின்றனர்.
முஹர்ரத்தையொட்டி இன்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ஷியா பிரிவு முஸ்லீம்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்ட அமைதி ஊர்வலம் நடைபெற்றது. திருவல்லிக்கேணியிலிருந்து தொடங்கிய ஊர்வலம் ஆயிரம் விளக்கு மசூதியில் முடிவடைந்தது.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு உடை அணிந்து நடந்து வந்தனர். கத்திகளாலும், வாள்களாலும் தங்களது உடலில் கீறிக் கொண்டு நடந்து வந்தனர்.
முஹர்ரம் ஊர்வலத்தையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications