பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம்- பிரிட்டன் ஆதரவு
டெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் கோர்டன் பிரவுன் கோரியுள்ளார்.
இந்திய-பிரிட்டன் நான்காவது மாநாட்டில் பங்கேற்ற டெல்லி வந்துள்ள அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவும் பிரிட்டனும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டணி மேலும் ஆழமாக வேண்டும். இரு நாட்டு விமான நிலையங்களையும் மேலும் பாதுகாப்பானவைகளாக மாற்ற அதிநவீன கருவிகளை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால் மிக விரைவில் உலகில் மிக முக்கியமான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகிவிடும். இந்த மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப ஐக்கிய நாடுகள் சபையிலும் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தரப்பட வேண்டும். இதை நான் தொடர்ந்து வலியுறுத்தேவன் என்றார்.
பிரவுனுக்கு டாக்டர் பட்டம்:
இதற்கிடையே இன்று டெல்லி பல்கலைக்கழகம் கார்டன் பிரவுனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.
துணை ஜனாதிபதியும் பல்கலைக்கழக வேந்தருமான ஹமீத் அன்சாரி இதனை வழங்கினார்.