கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 91 பள்ளிக் குழந்தைகள் தற்கொலை

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் தற்போது அதிகரித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம், பள்ளிகளில் அளவுக்கு அதிகமாக வாங்கப்படும் நன்கொடை, பீஸ், அதை கட்ட முடியாத மாணவ, மாணவர்கள் சந்திக்கும் அவலம் மற்றும் கடினமான பாடத் திட்டம் ஆகியவையே ஆகும்.
இது தவிர பள்ளியில் படிக்கும் மாணவிகள், மாணவர்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஏற்படும் தொல்லை காரணமாகவும், பாலியல் தொல்லைகள் காரணமாகவும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
கடந்த 5 வருடத்தில் மட்டும் 39 பேர் தற்கொலை செய்ய முயன்று காப்பாற்றப்பட்டுள்ளனர்.
தற்கொலை செய்து கொள்ளும் மாணவ-மாணவிகள் பெரும்பாலும் பள்ளிகளிலும், தங்கியிருக்கும் பள்ளி விடுதிகளிலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
பள்ளி நிர்வாகத்தினரால் தண்டிக்கப்பட்டு அதனால் காயமடைந்த மாணவ-மாணவிகள் கடந்த 5 வருடங்களில் 250 பேர் ஆவர்.
பள்ளிகள், விடுதிகளில் தரப்படும் கொடூர தண்டனை, அங்கு நிகழும் பாலியல் தொல்லைகள் ஆகியவை கறித்து விவாதிக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் ஒரு கூட்டத்தை நடத்தியது. அதில் இந்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன என்றார்.












Click it and Unblock the Notifications