For Daily Alerts
Just In
டெல்லி தமிழ்ச் சங்க பொங்கல் விழாவில் பங்கேற்ற அத்வானி
டெல்லி: டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை விழாவில் பாஜக தலைவர் அத்வானி கலந்து கொண்டார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டெல்லி தமிழ்ச் சங்கத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் கலை அரங்கத்தில் நடந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும், பாரதிய ஜனதா தலைவருமான அத்வானி கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், தமிழர்கள் பொங்கல் திருநாள் என்றும், வட மாநிலத்தவர் மகா சங்கராந்தி என்றும், கிழக்கு இந்தியாவில் உள்ளவர்கள் பீஹூ திருநாள் என்றும் இந்த தினத்தை கொண்டாடி மகிழ்வதாகக் கூறினார்.
வெகு விமரிசையாக நடைபெற்ற பொங்கல் விழாவில் நாதஸ்வர கச்சேரியும், பரதநாட்டிய நிகழ்ச்சியும், நகைச்சுவை மற்றும் பலகுரல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
Comments
Story first published: Tuesday, January 22, 2008, 15:32 [IST]