கிளிநொச்சி-புலிகளின் முக்கிய தளம் மீது விமானப் படை குண்டுவீச்சு
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: கிளிநொச்சி மாகாணத்தில் இரணைமடு ஏரிக்கு அருகே உள்ள கலமதுகுளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் மிக முக்கியமான தளத்தின் மீது போர் விமானங்கள் இன்று காலை தாக்குதல் நடத்தியதாக இலங்கை விமானப் படை தெரிவித்துள்ளது.
விமானப் படையின் செய்தித் தொடர்பாளர் விங் கமாண்டர் அண்டி விஜேசூர்யா கூறுகையில், வான் பகுதியில் இருந்தும் தரைப் பகுதியிலும் நடத்தப்பட்ட கண்காணிப்பின் அடிப்படையில் இந்த தளத்தின் மீது கடும் தாக்குதல்கள் இன்று நடத்தப்பட்டன. விமானப் படையின் அதிவேக ஜெட்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள இந்தத் தளத்தைத் தாக்கின.
மிக அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள இந்தத் தளத்தை எக்ஸ்ரே பேஸ் என்று வர்ணிப்பது வழக்கம். இந்தத் தளத்தை புலிகள் மிகப் பாதுகாப்பான ராணுவத் தளம் என்று கூறி வருகின்றனர்.
கிளிநொச்சியில் புலிகளின் மிக முக்கியமான கட்டுப்பாட்டுத் தளம் இது. இந்தத் தளத்துக்கு மிக முக்கியமான விடுதலைப் புலிகள் அமைப்பின் தீவிரவாதி வந்து போவது வழக்கம் என்றார் விஜேசூர்யா.
ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து புலிகள் தரப்பில் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications