For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பழனி-பஸ் பள்ளத்தில் கவிழிந்து 35 பக்தர்கள் காயம்

By Staff
Google Oneindia Tamil News


ஒட்டன்சத்திரம்: பழனி அருகே அரசுப் பேருந்து பள்ளத்திற்குள் கவிழ்ந்ததில் 35 பக்தர்கள் காயமடைந்தனர்.

பழனியில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று வருவதால் ஒட்டன்சத்திரம் முதல் பழனி வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

இதனால் பழனியில் இருந்து திண்டுக்கல், மதுரை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வேறு வழிகளில் மாற்றி விடப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 2-30 மணியளவில் பழனியில் இருந்து பக்தர்களுடன் மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள் தொப்பம்பட்டி என்ற இடத்தில் ரோட்டோரத்தில் உள்ள பெரிய பள்ளத்திற்குள் கவிழ்ந்தது.

இதில் பேருந்து ஓட்டுநர் உட்பட 35 பக்தர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பேருந்து விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X