Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டசபை-கையெழுத்து போட்டுவிட்டு திரும்பிப் போன ஜெ

Subscribe to Oneindia Tamil

Jayalalitha

சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதை முன்னிட்டு சட்டசபைக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, எம்.எல்.ஏக்கள் வருகைப் பதிவேடில் கையெழுத்துப் போட்டுவிட்டு திரும்பிப் போய்விட்டார்.

தமிழக சட்டசபையின் நடப்பு ஆண்டிற்கான (2008) முதல் கூட்டத்தொடர் இன்று துவங்கியது.

இந் நிலையில் காலை 9.15 மணிக்கு சட்டசபைக்கு வந்தார் ஜெயலலிதா. அவரை அதிமுக மாஜிக்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், எம்எல்ஏக்கள் ஆகியோர் காலில் விழுந்து வணங்கி வரவேற்றனர்.

பின்னர் அவர் சட்டசபையின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் போட்ட ஜெயலலிதா, சிறிது நேரம் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட்டு திரும்பிச் சென்று விட்டார்.

சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. ஜெயலலிதா காரில் ஏறுவதற்கு முன்னர் செய்தியாளர்கள் சூழந்து கொண்டு பல கேள்விகளை எழுப்பினர். ஆனால், பதிலேதும் சொல்லாமல் போய்விட்டார்.

விஜய்காந்த்:

அதே நேரத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காலை சட்டசபைக்கு வந்தார்.

முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்து விட்டு இருக்கையில் அமர்ந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+