திருவாரூரில் அமையப் போகும் மத்திய பல்கலைக்கழகம்
சென்னை: திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ஆளுநரை உரையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இன்று சட்டசபையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றுகையில்,
மத்திய பல்கலைக்கழகத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனால் மிக விரைவில் திருவாரூர் மாவட்டத்தில் அந்த மத்திய பல்கலைக்கழகம் அமையும். (இது முதல்வர் கருணாநிதி பிறந்த மாவட்டம் என்பது குறிப்பட்டதக்கது)
தமிழகம் முழுவதும் சமச்சீர் உயர் நிலைப் பள்ளிக் கல்வியை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தமிழகத்தில் ஒவ்வொரு குழந்தையும் 10 ஆண்டுகள் கட்டாயம் பள்ளியில் படிக்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்படும்.
11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மத்திய அரசு இதற்கான நிதியை ஒதுக்கவுள்ளது. குழந்தைகள் கல்விக்கான இத் திட்டத்துக்கு தமிழக அரசு முழு அளவில் கை கொடுக்கும்.
வேலை தேடும் இளைஞர்கள், மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் அறிவை வளர்க்கவும், இன்டர்வியூக்களில் சிறப்பாக பதிலளிக்கவும், அவர்களதுபொது அறிவை வளர்க்கவும், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.