நாடு முழுவதும் நாளை வங்கிகள் ஸ்டிரைக்-3 நாட்களுக்கு கஷ்டம்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் நாளை ஸ்டிரைக் செய்கின்றன. இதனால் தொடர்ந்து 3 நாட்களுக்கு வங்கிச் சேவைகள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை இணைப்பது, புதிய ஓய்வூதியத் திட்டம் போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு வங்கி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் நாளை ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் வங்கிப் பணியாளர்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.
பணிபுரியும்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், வங்கிப் பணிகளை அவுட் சோர்சிங் செய்வதை கைவிட வேண்டும், ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் முன் வைத்துள்ளனர்.
வேலைநிறுத்தத்துக்கு ஊழியர்களின் 5 சங்கங்களும், 4 வங்கி அதிகாரிகள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் நாளை வங்கிப் பணிகள் முழுமையாக பாதிக்கப்படும். அனைத்து வங்கிகளின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் வங்கிப்பணியாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
நாளை ஸ்டிரைக், நாளை மறுநாள் குடியரசு தின விழா வருகிறது. எனவே அன்றும் தேசிய விடுமுறை. ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல விடுமுறை. இதனால் 3 நாட்களுக்கு வங்கிச் சேவை இருக்காது என்பதால் வாடிக்கையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications