'எக்ஸ் ரே' முகாம் மீது தாக்குதல் நடக்கவில்லை: புலிகள்

கிளிநொச்சியில் கல்மடுகுளம் என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய முகாம் உள்ளது. அவ்வளவு சீக்கிரம் யாராலும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இந்த முகாம், அடர்ந்த காட்டுக்குள் உள்ளது. இதன் காரணமாக இந்த முகாமுக்கு எக்ஸ்ரே தளம் என்றும் ஒரு பெயர் உண்டு.
பிரபாகரன் அடிக்கடி இந்த முகாமுக்கு வந்து போவார். அவர் முக்கிய ஆலோசனைகள் நடத்தும் முகாம்களில் இதுவும் ஒன்று.
மிக மிக பலத்த பாதுகாப்பு தளமாக இதை விடுதலைப் புலிகள் கூறுகிறார்கள். இந்த முகாம் மீது நேற்று காலை 11 மணியளவில் விமானப்படை விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இந்த செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் அங்கிருந்து பிரபாகரன் வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது. எனவே பரபரப்பு மேலும் அதிகரித்தது.
ஆனால் இந்தத் செய்தியை விடுதலைப் புலிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதுகுறித்து விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறுகையில்,
விடுதலைப் புலிகளின் முதன்மை முகாமை அழித்ததாக ஒரு பெரும் பரப்புரையை மக்களைக் குழப்பும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல் அப்பட்டமான பொய்யாகும். அதில் எந்தவித உண்மையும் இல்லை.
விடுதலைப் புலிகளின் தலைமை அழிந்தது என்று முன்னர் 1989 ஆம் ஆண்டிலும், 2004 ஆம் ஆண்டும் இடம்பெற்ற சுனாமி தாக்குதலின் போதும் மக்களை குழப்பும் வகையில் பெரும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அது பொய் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
இலங்கை அரசாங்கம் இத்தகைய மலிவுப் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளது என்றார் அவர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications