புதுச்சேரியில் பாமக செயற்குழுக் கூட்டம் தொடங்கியது
புதுச்சேரி: பெரும் எதிர்பார்ப்புகளின் பின்னணியில், பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் இன்று காலை தொடங்கியது.
திமுகவையும், திமுக அரசையும் தொடர்ந்து சரமாரியாக குற்றம் சாட்டி வருகிறது பாமக. மேலும், 2011 சட்டசபைத் தேர்தலில் புதுக் கூட்டணி அமையும், அதற்கு பாமக தலைமை வகிக்கும், கூட்டணி ஆட்சி அமைப்போம் என்றும் டாக்டர் ராமதாஸ் பேசி வருகிறார்.
இந்த பரபரப்பான சூழலின் பின்னணியில் பாமகவின் செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் இன்று கூட்டப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையில், டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் செயற்குழுக் கூட்டம் கூடியது.
மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
தற்போதுள்ள அரசியல் நிலவரம் குறித்தும், கட்சி எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்தும் செயற்குழு உறுப்பினர்களின் கருத்தை அறியவுள்ளார் டாக்டர் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications