For Quick Alerts
For Daily Alerts
Just In
மதுரை ஐடி பூங்காவுக்கு விரைவில் அடிக்கல்: கருணாநிதி
சென்னை: மதுரையில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று இதுதொடர்பாக உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்துப் பேசுகையில்,
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கென தனி துறை உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தகவல் தொழில்நுட்பத்திற்கென தனி கொள்கை இங்குதான் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்க தடையில்லாச் சான்றிதழ்கள் துரிதமாக வழங்கப்படுகின்றன.
மதுரையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்றார் கருணாநிதி.
Comments
Story first published: Thursday, January 24, 2008, 14:53 [IST]