யுஎஸ்: இந்திய மாணவர் கொலை-குற்றவாளி கைது

அமெரிக்காவின் ட்யூக் நகரில் உள்ள பிராட் பொறியியல் கல்லூரியில், பி.எச்.டி ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு வந்தார் மஹதோ. இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
கடந்த 18ம் தேதி இரவு தனது குடியிருப்பில் மஹதோ சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் வடக்கு கரோலினா மாகாண போலீஸார் 19 வயது ஸ்டீபன் ஓட்ஸ் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். சினிமா பாணியில் காரில் தப்பிச் சென்ற இந்த நால்வரையும், நீண்ட நேர துரத்தலுக்குப் பின்னர் போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
ஓட்ஸ் ஒரு பழைய குற்றவாளி. பல தாக்குதல் வழக்குகளில் இவர் சம்பந்தப்பட்டுள்ளார்.
ஓட்ஸ் பிடிபட்டுள்ளதன் மூலம் ஜனவரி 1ம் தேதி முதல் நடந்த 70க்கும் மேற்பட்ட வழிப்பறி திருட்டுக்களுக்கு முடிவு ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அபிஜித் மஹதோவை சுட்டுக் கொன்றதாக ஓட்ஸ் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications