For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி கோவிலுக்கு 5 தஞ்சாவூர் ஓவியங்கள்-பெண் வழங்கினார்

By Staff
Google Oneindia Tamil News


திருப்பதி: திருப்பதி கோவிலுக்கு ஒரு பெண் தான் வரைந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள ஐந்து தஞ்சாவூர் ஓவியங்களை வழங்கியுள்ளார்.

லதா என்ற அந்தப் பெண்மணி கோவிலின் செயல் அதிகாரியிடம் நேற்று இந்த ஓவியங்களை வழங்கினார்.

திருப்பதி பிரம்மேற்சவம் குறித்த காட்சிகள் அந்த ஓவியங்களில் இடம் பிடித்துள்ளன. பிரமோற்சவத்தின்போது சுவாமி வலம் வரும் சூரிய பிரபா வாகனம், சந்திர பிரபா வாகனம், ஸ்ரீ வாரி மரத் தேர், முத்யபுபண்டிரி வாகனம், சர்வ பூபால வாகனம் ஆகியவை மிக அழகாக இந்த தஞ்சாவூர் ஓவியங்களில் வரையப்பட்டுள்ளன.

ஏற்கனவே கடந்த ஆண்டு பிரமோற்சவத்தின்போதும் இவர் திருப்பதி மலையப்ப சுவாமியை பல்வேறு வாகனங்களில் வலம் வரும் வகையில் வரைந்து கோவிலுக்கு தானமாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X