கும்பகோணம் பள்ளி தீ விபத்து: பலியான குழந்தைகள் குடும்பங்களுக்கு இலவச வீடு
Subscribe to Oneindia Tamil

கும்பகோணத்தில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பரிதாபமாக 94 குழந்தைகள் பலியாயினர்.
விபத்தில் இறந்த குழந்தைகளில் 51 பேரின் குடும்பத்தாருக்கு மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் இலவச வீடுகள் கட்டுவதற்காக இடம் ஒதுக்கப்பட்டு முதல் கட்டமாக தற்போது 10 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த வீடுகளை இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நாளை மாதா அமிர்தானந்தமயி வழங்கவுள்ளார்.
கும்பகோணம் பாணாதுறை மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நாளை மாலை இந் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. அப்போது சத்சங்கம், பஜனை, தியானம் ஆகியவையும் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்ச்சியில் 10 வீடுகளுக்கான சாவிகளை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கத்திடம் மாதா அமிர்ந்தானந்தாமயி வழங்குகிறார்.












Click it and Unblock the Notifications