கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து சாவு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம், சேர்ந்தமரம் அருகேயுள்ள வீரசிகாமணி கிராமததை சேர்ந்தவ ஆறுமுகசாமி-முருகேஸ்வரி தம்பதியினருக்கு கணேஷ், கவிதா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். ஆறுமுகசாமி ஆட்டோ டிரைவராக உள்ளார்.
கணவன்-மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் சம்பவதன்று ஆறுமுகச்சாமி மனைவி முருகேஸ்வரியை அடித்ததாக தெரிகிறது.
இதில் மனம் உடைத்த முருகேஸ்வரி தனது உடலில் மண்ணென்னெய் ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை அக்கம்பக்த்தில் இருந்தவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்கமால் முருகேஸ்வரி இறந்துவிட்டார்.
இந்த தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications