For Daily Alerts
Just In
நாராயணமூர்த்திக்கு பிரான்ஸ் நாட்டு மிக உயர்ந்த விருது
டெல்லி: இன்போசிஸ் நிறுவனத் தலைவரான நாராயணமூர்த்திக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ஆபிசர் ஆப் லெஜன் ஆப் ஹானர் வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி இந்தியா வந்துள்ள நிலையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நாராயணமூர்த்திக்கு மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதையும் அவர் வென்றுள்ளார்.
பிரான்ஸ் கல்வி அமைச்சரான வெலேரி பெக்ரெசி இந்த விருதை நாராயணமூர்த்திக்கு வழங்கினார். இந்த விருதை நிறுவியது மாவீரன் நெப்போலியன் ஆவார்.
மூர்த்தி தனது பொறியியல் உயர் கல்வியை பிரான்சில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Sunday, January 27, 2008, 11:59 [IST]