மாணவனை தனி அறையில் பூட்டி வைத்து அடித்தாக 3 ஆசிரியர்கள் மீது புகார்
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் பள்ளி மாணவனை தனி அறையில் பூட்டி வைத்து அடித்தாக 3 ஆசிரியர்கள் மீது பரபரப்பு புகார் கூறப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 650 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவன் காரத்திக். இந்த மாணவனை கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் ரரேஷ், பழனிச்சாமி, இளங்கோ ஆகிய மூன்று ஆசிரியர்கள் ஒரு தனி அறையில் பூட்டி வைத்து அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் அடித்ததில் அந்த மாணவனுக்கு காதில் ரத்தமும் வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அந்த மாணவனை பள்ளி நிர்வாகம் 15 நாட்கள் இடை நீக்கம் செய்துள்ளது.
காயமடைந்த கார்த்திக் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கார்த்திகை தனி அறையில் பூட்டி வைத்து அடித்தாக ரரேஷ், பழனிச்சாமி, இளங்கோ ஆகிய மூன்று ஆசிரியர்கள் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் கருத்து கூற மறுத்து விட்டனர்.